2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 17 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான, போலி நாணயத் தாள்களுடன், பியகம பெரகஸ் சந்தி பிரதேசத்தில் வைத்து ஒருவ​ர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள்-38, 1,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள்-300, 500 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள்-165 வும் கைப்பற்றப்பட்டுள்ளனவென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற ஒழிப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கைது செய்யப்பட்ட 40 வயதான சந்தேகநபர், மல்வானை பிரதேசத்தைச் ​சேர்ந்தவர் என்றும், அவரை மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்குப்பட்டுள்ளனவென அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .