2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் பிக்கு கைது

Editorial   / 2018 ஜூலை 21 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் பொது வைத்தியசாலைக்கு முன்னால் வைத்து நேற்று (20) மாலை, 1,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் இரண்டுடன் பிக்கு ஒருவர், சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவத்தேகம மகமெத்தேவ பிரதேச விகாரை ஒன்றில் பணியாற்றும் பிக்குவே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு, சிலாபம் பொது வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள கடைகளில், ஆயிரம் ரூபாய் நாணயத் தாளை கொடுத்து, பலவிதமான பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது, சிலாபம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து,ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த பிக்குவை கைதுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X