2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போலியாக அச்சிடப்பட்ட டிக்கெட்டுகளை விற்றவர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.கேதீஸ், எஸ்.கணேசன், ஆர்.கோகுலன்   
போலியாக அச்சிடப்பட்ட ஜயோதா, சங்வர்த்தன லொத்தர் ஆகிய அதிர்ஷ்ட இலாபச்சீட்டிழுப்பு டிக்கெட்டுகளை விற்பனை செய்த நபர் ஒருவர், உடபுஸ்ஸல்லாவ நகரில் வைத்து நேற்று (16) மாலை உடபுஸ்ஸல்லாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கண்டி - மெனிக்கின்ன பிரதேசத்தைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

குறித்த நபர், சீட்டிழுப்பு இலக்கங்கள் முடிவடைந்த டிக்கெட்டுகளின் இலக்கங்களை போலியாக அச்சிட்டு உடபுஸ்ஸல்லாவ நகரில் விற்பனை செய்து வந்துள்ளார்.   

இது தொடர்பில், உடபுஸ்ஸல்லாவ பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, பொலிஸார் குறித்த நபரைக்  கைதுசெய்தனர்.   

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 3,629 ஜயோதா, சங்வர்த்தன லொத்தர் டிக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும், கைதுசெய்யப்பட்ட நபரை விசாரணைகளுக்கு உட்படுத்திய பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .