2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் விபத்து; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - செங்கலடி பிரதான வீதியில் நேற்று (18) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,  மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்புப் பகுதியிலிருந்து முறக்கொட்டாஞ்சேனை நோக்கி வேகமாகப் பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, செங்கலடி பிரதான வீதியில் நடந்து சென்ற நபர் மீதும், சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த நபர் மீது மோதித்தள்ளியுள்ளதுடன், அங்கிருந்த உணவகம், உணவகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீதும் கார் மோதியுள்ளது.

இந்த விபத்தில் சைக்களில் சென்றுக்கொண்டிருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .