2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பேரின்பராஜா சபேஷ்)
 
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரசபை முன்னாள் உறுப்பினர் ஒருவரின் காணியிலிருந்து நேற்று (14) மாலை கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகரசபை முன்னாள் உறுப்பினர் எம்.முஸ்தபாவின் காணியில் இருந்த பப்பாசி மரம் ஒன்றினை அகற்ற குழி வெட்டிய போது, இரண்டு அடி ஆழத்தில் குறித்த கைக்குண்டு பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் உட்புகுத்தப்பட்டு நிலையில் காணப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவம் தொடர்காக ஏறாவூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .