2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு நோக்கிய ரயில் சேவைகள் ஆரம்பம்

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு நோக்கிய ரயில் சேவையானது,  வழமைக்குத் திரும்பியுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்​று (18), ஹபரனை – பலுகஸ்வெவ ரயில் நிலையங்களுக்கு இடையில் 127 கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் யானைகள் மோதியதால் இடம்பெற்ற விபத்தின் காரணமாக, குறித்த ரயில் பாதை  சரிசெய்யப்படாதமையினால், மட்டக்களப்பு நோக்கிய ரயில் ​சேவைகள் நேற்று (18) ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.

இதன்காரணமாக, கொழும்பு – கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் ரயில்கள் மகோ ரயில் நிலையம் வரையிலும், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயில்கள் கல்ஓயா வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டு காணப்பட்ட நிலையில், இன்று (19) அதிகாலை 06.05 க்கு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கு ரயிலொன்றும், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 06.10 க்கு ரயிலொன்றுமென, இரு ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .