2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மின்கோபுரத்தில் ஏறியவர் பொலிஸாரால் மீட்கப்பட்டார்

Editorial   / 2020 ஒக்டோபர் 01 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவை பிரதான வீதியிலுள்ள அதிக மின்வலுவைக் கொண்ட மின் கோபுரம் ஒன்றின் மீதேறி, நபர் ஒருவர் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில், அவர் தற்போது பொலிஸார், மின்சார சபை அதிகாரிகளால் கீழிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பகல் 12.30 மணியளவில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், தனிப்பட்ட காரணங்களுக்காகவே மின் கோபுரத்தில் ஏறியுள்ளாரென்றும்  இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த நபர் மின்கோபுரத்தில் ஏறியவுடன், அந்தப் பிரதேசத்தில் மின்தடை அமுல்படுத்தப்பட்டதென்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .