2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மனைவி பலி ; கணவன் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலத்த தீக்காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி நேற்று  (22) இரவு உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் வசித்துவந்த மூர்த்தி லோகேஸ்வரி (வயது 34) என்ற பெண்ணே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது கணவனாலேயே இவர், பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்டார் என்று சந்தேகிக்கப்படுகிறது.

குறித்தப் பெண்ணை, அவரின் கணவரான ஜூட் குமார (வயது 41) என்பவர், தொடர்ச்சியாகச் சித்திரவதைக்கு உள்ளாக்கி வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 30ஆம் திகதி, மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் போது, மனைவி மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்தார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, அயலவர்களால் தீயணைக்கப்பட்டு, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பெண், நேற்று உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, நீர்கொழும்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X