2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் இறுதி தீர்மானம் நாளை

Editorial   / 2019 மார்ச் 21 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மனிதப் புதைக்குழியில் தொடர்ந்து அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதா அல்லது பூரணமாக இதனை நிறுத்துவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை (22) எடுக்கப்படவுள்ளது.

மன்னார் நீதவான் டீ.சரவணராஜா தலைமையில், இந்த தீர்மானம் தொடர்பான கலந்துரையாடல், நாளை இடம்பெறவுள்ளதாக, அகழ்வுப்பணிகளை மேற்கொண்டுவந்த விசேட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இக் கலந்துரையாடல், மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .