2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்தது

Editorial   / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சித்திரைப் புத்தாண்டு காலத்தில், மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை குறைவடைந்துள்ளது என, ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது.

எனினும், போஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களிலும் 60 ரூபாய் தொடக்கம் 70 ரூபாய் வரையில் மாத்திரமே மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சந்தைகள், ஒரு சில விற்பனை நிலையங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துக் காணப்படுவதாகவும் எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர் மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .