2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மரணதண்டனை தீர்மானத்தை கைவிடுமாறு ஐ.ஒ வேண்டுகோள்

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

கொழும்பில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதரகங்களின் தலைமை அதிகாரிகள், கனடா உயர்ஸ்தானிகர் மற்றும் நோர்வே வதிவிட தூதுவர் ஆகியோரின் உடன்பாட்டுக்கிணங்க வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதரகம், பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், பிரான்ஸ் தூதரகம், ஜேர்மனிய தூதரகம், ரொமேனிய தூதரகம், இத்தாலி தூதரகம், நெதர்லாந்து தூதரகம், நோர்வே தூதரகம் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பிலான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் தொடர்பிலான தெளிவுபடுத்தல் ஒன்றை அந்த அறிக்கை ஊடாக அனுப்பிவைத்துள்ளன.  

மேலும, தாம் சகல விதமான குற்றங்களுக்கும், எவ்வேளையிலும் மரண தண்டனை வழங்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பை கொண்டுள்ளதாக இந்த உயர்ஸ்தானிகராலயங்கள் தெரிவித்துள்ளன. மனித கௌரவத்துக்கு பொருத்தமற்றதாக மரண தண்டனை அமைந்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் குற்றம் ஏற்படுவதை தவிர்க்கக்கூடிய திறனை மரணதண்டனை உறுதியாக கொண்டிராததுடன், தவறான தீர்ப்புகள் காரணமாக அநாவசியமாக உயிரிழப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படலாம் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை மீட்டுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக மரண தண்டனையை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்ட நிலையிலேயே பேணுமாறு அந்த அறிக்கை ஊடாக, கோரியுள்ளதுடன், இலங்கையின் பாரம்பரியமான மரண தண்டனைக்கு எதிர்ப்பை பேணுமாறும் கோரியுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .