2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மருதானையில் வாகன நெரிசல்: லோட்டஸ் வீதிக்கு பூட்டு

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தபால் ஊழியர்களின் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் மருதானை, டீ.ஆர்.விஜேயவர்தன மாவத்தையில் ஒரு பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் லோட்டஸ் வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள், இன்று (18) முற்பகல் மத்திய தபால் பரிவர்தனை நிலையத்துக்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக சென்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றார்.

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .