2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மருந்துவில்லை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருந்து வில்லை தொண்டையில் சிக்கி,ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவமொன்று, கலேவெல நகரில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (15) இரவு, சிறுவனின் தொண்டையில் மருந்து வில்லை சிக்கியதையடுத்து, உடனடியாக கலேவெல பிரதேச வைத்தியசாலைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கலெவெல- ஜயதிலக்க மாவத்தையைச் சேர்ந்த, மிதும் சனுஜ கங்கொடவத்த  என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கலேவெல ஆரம்பப் பாடசாலையில் கல்விப் பயிலும் குறித்த சிறுவனுக்கு, சுகாதார பிரிவினரால் நேற்று (15), பூச்சி மருந்து வழங்கப்பட்டுள்ளது.

சிறுவனின் தாய், குறித்த மருந்து வில்லையை, நேற்று (15) இரவு, இரு துண்டுகளாக்கி சிறுவனுக்கு பருக கொடுத்த போதே, இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X