Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 மார்ச் 04 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில், கிணற்றுக்குள் வீசப்பட்ட மற்றைய இரண்டு பிள்ளைகளினதும் சடலங்கள், இன்று (04) காலை மீட்கப்பட்டது.
நேற்று (03) , தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு
தா்னும் குதித்த தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டதோடு, குழந்தைகள்
மூவரும் உயிரிழந்திருந்தனர்.
அதில், ஒரு குழந்தையின் சடலம் உடனடியாக மீட்கப்பட்டு, கிளிநொச்சி வைத்திசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
கிணற்றுக்குள் குதித்த தாயார், கிணற்றின் படிக்கற்களைப் பிடித்ததால் உயிர்
தப்பிக்கொண்டார்.
ஏனைய குழந்தைகளை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, கிணற்றுக்குள்
இருப்பது நேற்று இரவு தெரியவந்த பின்னர், இன்று காலை 10.30 மணியளவில், கிளிநொச்சி மாவட்ட நீதவான் ரி. சரவணராஜா முன்னிலையில், கடற்படையின் உதவியுடன் இரண்டு குழந்தைகளினதும் சடலங்கள்
மீட்க்கப்பட்டன.
ஒன்றரை வயதுடைய கிருபாகரன் டேனேஸ், ஐந்து வயதுடைய கிருபாகரன் அக்சயா,
எட்டு வயதுடைய கிருபாகரன் கிருத்திகா ஆகிய சிறுவர்களே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், தற்கொலைக்கு முயன்ற பெண் எழுதியதாக குறிப்பிடப்படும் கடிதம்
ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அதில், "குடியும் அடியும் காரணமாக என்னால் வாழ முடியாதுள்ளது. இன்று எனது பிறந்த நாள். நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இந்த குடிகாரனுக்கு தண்டனை வழங்க வேண்டும்" என எழுதப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago