2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

'மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ரணில் இரங்கல்'

Editorial   / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கு இன்றைய தினம் (19) சென்று, இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அதல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவையொட்டி, அங்குள்ள குறிப்பு புத்தகத்தில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை எழுதி வெளியிட்டார்.

அதன் பிறகு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “வாஜ்பாய் உலகின் மிகச் சிறந்த மூத்த பிரதமராவார். அத்துடன் அவர் இலங்கையின் மிகச் சிறந்த நண்பருமாவார்” எனத் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இளைஞர் விவகாரம், வணிக மேலாண்மை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X