2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மல்வானை பிரதேசத்திலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்பு

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பியகம – மல்வானை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள குப்பை மேடு ஒன்றிலிருந்து சிசுவொன்றின் சடலம் ​மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (18) இரவு பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸாரால், குறித்த குப்பை மேடுக்கு அருகிலிருந்து சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சிசுவின் பெற்றோர்கள் தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கபெறாத நிலையில், இதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .