2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மழை நிலைமை அதிகரிக்கும்

Editorial   / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் பிற்பகலில் பெய்யும் இடியுடன் கூடிய மழை நிலைமையில் சிறு அதிகரிப்பு இன்று இரவிலிருந்து ஏற்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் பல இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் குறிப்பாக மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 10-20 கிலோமீற்றர் வரை காணப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X