2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மஹிந்தவிடம் தினேஷ் கடும் கேள்வி

Editorial   / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சியினர் சபைக்குள் கொண்டுவந்திருக்கும் பெனர் உள்ளிட்ட பொருள்கள் பலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதுதொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் சபைக்குள் பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதுதொடர்பில் தேடியறியவேண்டும்.

இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார, ஆளும் கட்சியினரும் சபைக்குள், பாதுகாப்பற்ற நிலைமையை உருவாக்குவதற்கான பொருள்களை கொண்டுவந்துள்ளனர். அவை தொடர்பிலும் விசாரணைகளை முன்வைக்குமாறு நளீன் பண்டார எம்.பி கேட்டுக்கொண்டார்.

இதன்போது, ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. அத்துடன், பதற்றமான நிலைமையொன்றும் ஏற்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .