2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மஹரகமையில் தீப்பரவல் கட்டடமொன்று முழுமையாக சேதம்

Editorial   / 2019 ஏப்ரல் 18 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று அதிகாலை 3 மணியளவில் மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள 4 மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக, குறித்த கட்டடம் முழுமையாக சேதமடைந்துள்ளது.

கடதாசி பைகளை தயாரிக்கும் கட்டடம் ஒன்றிலேயே இத் தீப்பரவல் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், தெஹிவளை - கல்கிஸ்ஸ, கோட்டே நகர சபையின் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கட்டடம் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில், இத் தீப்பரவலுக்கான காரணம் குறித்த விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X