Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஜூலை 17 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க இன்று (17) தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
எந்தவொரு காரணங்களுமின்றி தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 11ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையிலேயே இன்று அதனைக் கைவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி கண்டி திகன பகுதியில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற கலகத்திற்கும் அமித் வீரசிங்கவுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்து மார்ச் மாதம் 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago