2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘ மஹிந்த ​கையெழுத்திடா விட்டாலும் ஆதரவாகவே வாக்களிப்பார் ‘

Editorial   / 2019 மே 19 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் கையெழுத்திடாவிட்டாலும், அவர், இதற்கு ஆதரவாகவே வாக்களிப்பாரென, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த ஏன் கையெழுத்திடவில்லை என அனைவரும் வினவுவதாகத் தெரிவித்த அவர், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகிய இருவருக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த கையெழுத்திடவில்லை. ஆனால் ஆதரவாக வாக்களித்த​தாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் எமது தலைவர், அதேப்போல் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். எனவே அவரது பதவிக்கு பொருத்தமான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மாத்திரம் தான் அவர் கையெழுத்திடுவார் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .