2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மஹிந்தவிடம் சீ.ஐ.டீ விசாரணை

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறுவர் அடங்கிய குழுவினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு விசாரணைக்காக சென்றுள்ளனர்.

தனிப்பட்ட அலுவல்களின் நிமித்தம் வெளியில் சென்றிருந்த அவர், 11.30 அளவில் தனது இல்லத்துக்கு வருகைத் தந்துள்ளார்.

இந்நிலையில், தற்போது அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்கள  அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .