2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாடியிலிருந்து விழுந்து சீனப் பி​ரஜை பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா,  மாகஸ்தோட்ட பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றின் மேல் மாடியிலிருந்து விழுந்ததில் சீனப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (23) காலை 06.30 மணியளவில், குறித்த சுற்றுலா விடுதியின் மூன்றாவது மாடியில் நின்றுகொண்டிருந்த  பெண், குறித்த மேல் மாடியில் பொருத்தப்பட்டிருந்த பலகை தவறுதலாக உடைந்து விழுந்ததில், பலத்த காயங்களுக்குட்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார்  தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்த குறித்த பெண், சீனாவை சேர்ந்தவரென்பதுடன், 34 வயதுடையரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X