2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாலக சில்வா நீதிமன்றில் முன்னிலை

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவை கைது செய்யுமாறு நேற்றைய தினம் (18) பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய அவர் இன்று (19) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

நேற்றைய தினம் (18) நீதிமன்றில் முன்னிலையாக தவறியமை தொடர்பில் அவர் இன்று மருத்துவ அறிக்கை ஒன்றினை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

இது தொடர்பில ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிகா விமலசிறி குறித்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கொழும்பிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் பிரித்தானிய பிரஜை  ஒருவருடன், ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில்  நீதிஜமன்றில் முன்னிலையாக தவறியமைக்காக இவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X