2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மின் கம்பியில் சிக்குண்டு நபர் பலி

Yuganthini   / 2017 ஜூலை 27 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கினிகத்தேனை , புலத்வத்த பகுதியில் தூரியன் பழங்களை பாதுகாப்பதற்பகாகப் போடப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்குண்டு நபர் ஒருவர் இன்று (27) காலை உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவதத்தில் பொல்பிட்டிய, ஹிட்டிகேகம, புலத்தவத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வை. குலரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் வீட்டுக்கு குடிநீர் வராதமையின் காரணமாக அப்பகுதியிலுள்ள நீர்க்குழாயினை திருத்துவதற்காக சென்றபோதே மின் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

தூரியன் பழ தோட்ட உரிமையாளரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .