2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 7 நாட்களாக மின்சார சபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு நேற்று (20) இரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மின்சார சபை ஊழியர்களால், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தம் ஒன்றுக்கு அரசாங்கம் கைச்சாத்திட்டதை அடுத்தே, இந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாக, இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்தார்.

மேலும், இவர்களது பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்தமையால், இன்றிலிருந்து தங்களது பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ளுமாறு, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  ஊழியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .