2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மின்சாரத்தை 90 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்துவர்களுக்கு பரிசு

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரத்தை 90 அலகுகளுக்கு குறைவாகப் பயன்படுத்தும் வீடுகளுக்கு,  LED  மின்குமிழ்களை நிவாரண விலையில் வழங்குவதற்கு, தீர்மானித்துள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று சுகந்ததாச உள்ளக அ​ரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மின்சாரத்தை உற்பத்தி செய்வதைப் போலவே, முக்கியமான விடயம் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்த அமைச்சர் இதுவரை எமது நாட்டில் உள்ள 2 மில்லியன் மக்கள் சாதாரண மின்குமிழபை் பயன்படுத்துவதாகவும் பொருளாதார பிரச்சினை​யே இதற்கான காரணமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், சாதாரண மின்குமிழ்களைப் பயன்படுத்துவதை விட  LED  மின்குமிழ்கள் மூலம் 60 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X