2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மீட்பு பணிகளில் 22 கடற்படை குழுக்கள்

George   / 2017 மே 26 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காகவும் மீட்பு நடவடிக்கைக்காகவும் தென் மற்றும் மேல் மகாணங்களில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மாகாணங்களில் 143 கடற்படையினர், 22 டிங்கி படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லுத்தினன் கொமாண்டார் சமிந்த வலாகுலகே தெரிவித்தார்.

தென் மாகாணத்தழல் 10 குழுக்களும் மேல் மாகாணத்தில் 12 குழுக்களும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .