2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முகாமைத்துவம், வர்த்தக பிரிவுகளுக்கான மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகாமைத்துவ மற்றும் வர்த்தக பிரிவுகளுக்கான மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த மாணவர்களை உள்வாங்கும் பொழுது, அதற்கான பிரத்தியேக வசதிகளை ஏற்படுத்திக்  கொடுக்கும் புதிய கட்டடம் ஒன்றை பல்கலைகழக வளாகத்தில் நிர்மாணிப்பது தொடர்பில் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் விசேட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பல்கலைகழக உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தற்சமயம் சுமார் 1,300 மாணவர்கள் இந்தப் பிரிவுகளில் கல்வி கற்று வருகின்றனர்.

கடந்த வருட உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவுகளுக்கு அமைய எதிர்வரும் நவம்பர் மாதம் புதிய மாணவர்கள் உள்வாங்கப்படுவர் என்று உபவேந்தர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .