2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முன்னாள் தூதுவரை கைதுசெய்யுமாறு பிடியாணை

Editorial   / 2017 நவம்பர் 17 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைதுசெய்யுமாறு, கோட்டை நீதிமன்ற நீதவான், பிடியாணை பிறப்பித்துள்ளார்.

அவர், தூதுவராக பதவிவகித்த காலத்தில், அரசாங்கத்துக்கு சொந்தமான 132,000 டொலரை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்று அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விக்ரமசூரிய, மேல்நீதிமன்றத்தின் ஊடாக பிணையை பெற்று, சிகிச்சைக்காக செல்வதாக கூறி, அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, அவருக்கு பிணையாளர்களாக கைச்சாத்திட்டுள்ள நால்வரையும், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும், கோட்டை நீதவான், நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .