2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முறையற்ற நிர்வாகமே நட்டத்திற்கு காரணம்

Editorial   / 2018 மார்ச் 21 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முறையற்ற நிர்வாகச் செயற்பாடுகளே ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திறமையான நிர்வாகச் சபையை உடனடியாக ஏற்படுத்துவதன் மூலம் நிறுவனத்தை இலாபமடையச் செய்ய முடியுமென அவர் தொட்டலங்க பிரதேசத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகச் சபை சம்பந்தப்பட்ட அமைச்சின் ஆலோசனைகள் இன்றி தன்னிச்சையாக தீர்மானங்களை மேற்கொள்ளவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .