2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மேல்மாகாண பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் இரத்து

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாண சபை ஊடாக நிர்வகிக்கப்படும் கொழும்பு கல்வி வலய பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகள், விழாக்களுக்காக மாகாண சபை உறுப்பினர்களை அழைக்குமாறு மேல் மாகாண  வலய  கல்வி பணிப்பாளர் அதிபர்களுக்கு அனுப்பிய கடிதமானது இரத்து செய்யப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக, சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக மேல்மாகாண கல்வி பணிப்பாளர் ஸ்ரீலால் நோனீஸ் விடுத்த உத்தரவுக்கமைய குறித்த கடிதம் இரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, கொழும்பு கல்வி வலய பணிப்பாளர் ஜே.என். சில்வாவால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதமானது இரத்துசெய்யப்படும் கடிதம் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X