2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மைத்திரி, கோட்டா கொலை சூழ்ச்சி; முக்கிய ஆயுதம் கண்டுபிடிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் சூழ்ச்சிகள் தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றவியல் விசாரணைப் பிரிவு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடமிருந்து இரண்டு இலகு இந்தியதிரத் துப்பாக்கிகளை  (எல்எம்ஜி) கைப்பற்றியுள்ளது.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட இந்த துப்பாக்கி, ஜனாதிபதியின் கொலை சூழ்ச்சிக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணைகளை குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரின் பணிகளுக்கு, இலகு இயந்திரத் துப்பாக்கிகள் தேவையில்லை என்ற நிலையில், பின்னர் எதற்காக குறித்த துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .