2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மொட்டு உறுப்பினருக்குப் பிணை

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு) உறுப்பினர் கீகானேஜ் குலதிஸ்ஸ, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவர், தெமட்டகொடையிலுள்ள சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்தில் குழப்பகரமான நிலைமையை தோற்றுவிப்பதற்கு பிரதான நபராக இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, 10 இலட்சம் ரூபாய் ரொக்கப்பிணையிலும், 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுதலைச் செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .