2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’யுத்தம் தொடர்பில் பேச அரசியல் கட்சிகளுக்கு உரிமையுள்ளது’

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

படைவீரர்களுக்கு இடம்பெற்ற அநீதிகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

யுத்தம், யுத்தவெற்றி அல்லது யுத்தவீரன் உள்ளிட்டவற்றை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று (16) விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் சுட்டிக்காட்டியுள்ளார்.

'நாட்டை பாதுகாக்கும் யுத்தத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் தொடர்பில், தேர்தல் மேடைகளில் மக்களுக்கு கூற வேண்டிய கதைகள் உள்ளன' என்றும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .