2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யானைகள் உயிரிழப்பு; இவ்வாரத்துக்குள் விசாரணை அறிக்கை

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபரணை, தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 யானைகள் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பான அறிக்கை இந்த வாரத்துக்குள் முன்வைக்கப்படும் என அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த யானைகளின் உடல்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளை கொண்டு முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் பின்னர் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த விசாரணைகளில்  7 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யானைகள் உயிரிழந்தமைக்கு அவற்றின் உடலில் நஞ்சு கலந்தமையே காரணம் என கடந்த வாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், காரணத்தை கண்டறிவதற்காக, யானைகளின் உடல் மாதிரிகள், பேராதனை பல்கலைக்கழக மிருக வைத்திய பீடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .