2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’யுத்தத்தின் பின்னரான செயற்பாடுகள் முன்னுதாரணமாக அமைந்துள்ளன’

Editorial   / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினருமான பரோன் நெஸ்பி லண்டன் நகரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று (18) பிற்பகல் லண்டன் நகரில் பரோன் நெஸ்பி சந்தித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களை பாராட்டிய பரோன் நெஸ்பி இலங்கையின் உண்மையான ஆதரவாளர் என்ற வகையில் அதற்கான ஒத்துழைப்புக்களையும் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயற்றிட்டங்களையும் பாராட்டிய பரோன் நெஸ்பி, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பணிகள் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக தெரிவித்தார்.

இத்தகைய செயற்பாடுகள் பற்றிய சரியான, போதிய தகவல்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜெனிவாவுக்கும் உரியவாறு கிடைக்கப்பெறாமை வருந்தத்தக்கதாகும் என தெரிவித்த பரோன் நெஸ்பி, அந்த உண்மை நிலை தொடர்பாக அவர்களை தெளிவுபடுத்த தாம் தமது பூரண உதவியை வழங்குவதாகவும் குறிப்பிட்டார். 

இலங்கையின் உண்மையான நிலைமை தொடர்பாக போதிய புரிந்துணர்வுடன் நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக பரோன் நெஸ்பி வழங்கும் தனிப்பட்ட உதவிகளுக்கும் இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .