2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ரஞ்சனின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்ய குழு நியமனம்

Editorial   / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கைன் பயன்படுத்துபர்களுள்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டை விசாரணை செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போதே இக் குழு நியமிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து தொடர்பில் ஆராய்ந்து அடுத்த செயற்குழு கூட்டத்தின் போது, அறிக்கை சமர்ப்பிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் மாரசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினரான நிஸ்ஸங்க நாணயக்கார ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .