2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரத்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணிநீக்கம்

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கபில செனரத் திசாநாயக்க நேற்று(18) முதல் அமுலாகும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால்  இவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உடுதும்புர பிரதேச பெண் கிராம சேவையாளரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்தே, இவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

ரத்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் விசேட விசாரணை பிரிவினரால் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .