2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரயில் - மோட்டார் வாகன விபத்து; இருவர் பலி

Editorial   / 2018 ஜூன் 18 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தானை – பேரலந்தை பகுதியில் ஏற்பட்ட ரயில் - மோட்டார் வாகன விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர்.

ரயில் பாதுகாப்புக் கடவை மூடியிருந்த நிலையில், அதனூடாக மோட்டார் வாகனத்தைச் செலுத்தியதனாலேயே, மோட்டார் வாகனப் பயணிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், இந்தச் சம்பவம் நேற்று (17) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர். 

கல்பொரளை, களனிப் பிரதேசத்தைச் சேர்ந்த, W.M சேனக விக்ரமசிங்க (வயது 41)  மற்றும்  பட்டிவெல, கோனவெல பிரதேசத்தைச் சேர்ந்த M.A ரஞ்சித் குமாரசிரி (வயது 42) ஆகியோரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

சம்பவத்தையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், விபத்தில் சிக்கிய இருவரையும் ராகம வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும் குறித்த விபத்தானது அருகிலிருந்த CCTV கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .