2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரயில் விபத்து ; ஐவர் படுகாயம்

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் – வெல்லவ ரயில் வழி பாதையில் கெப் ரக வாகனமொன்று ரயிலுடன் மோதுண்டதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (22) அதிகாலை, குருநாகல் நோக்கி பயணித்த கெப் ரக வாகனமொன்று,  திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துகொண்டிருந்த ரயிலுடன் மோதுண்டதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரில், இராணுவ மேஜர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .