2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ரிஷாட் சபை செல்ல சட்டச் சிக்கலில்லை’

Niroshini   / 2021 மே 06 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதில், எவ்விதச் சட்டச் சிக்கலும் இல்லையென, சட்ட மா அதிபர் தப்புல டீ லிவே​ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரால், சட்ட மா அதிபரிடம் விடுக்கப்பட்ட சட்ட ஆலோசனையின் போதே, சட்ட மா அதிபர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், ரிஷாட் பதியூதீன் எம்.பி மற்றும் அவரது சகோதரர் ரிஜாத் பதியூதீன் ஆகிய இருவரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X