2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரிஷாட் விவகாரம்: கூட்டத்தை கூட்டுகிறார் கரு

Editorial   / 2019 மே 18 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்குட்படுத்தும் திகதி தொடர்பாக முடிவெடுக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை, சபாநாயகர் கருஜயசூரிய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளார்.

66 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன், 10 குற்றச்சாட்டுகளுடன் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை,  நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி ஆகிய,  நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X