2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இந்த மாதம் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

31ஆம் திகதி மீண்டும் விசாரணை ஆணைக்குழு கூடி, சாட்சியாளர்களை அழைப்பது குறித்து கலந்துரையாடும் என, ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் நாள்களில் வாக்குமூலங்களை வழங்கவுள்ள சகல சாட்சியாளர்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி உருவாக்கப்பட்ட இந்த விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் இந்த வருடம் டிசெம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .