2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வட, கிழக்கு மக்களுக்கு நிரந்தர வீடுகள்

Editorial   / 2017 ஓகஸ்ட் 20 , பி.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக, அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். 

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“30 வருட காலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.  

“இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனைக்கே அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வீடுகளை அமைப்பதற்கான கேள்வி மனுக்கள் கோரப்படவுள்ளன. 

இந்தப் பணியில் தேசிய ஒருங்கிணைப்புக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சால் ஏனைய அமைச்சுகளையும், நிறுவனங்களையும் இணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.  

இந்த அமைச்சுக்குப் பொறுப்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, அவர் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X