Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதியர் அலுவலக உத்தியோகத்தர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து, நாளை மறுதினம் (21) சுகயீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனரென, அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டரை வருடங்களாக வழங்கப்பட வேண்டிய, மேலதிக கொடுப்பனவை வழங்காமை, மாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்களின் தனிப்பட்ட ஆவணங்களில் காணப்படும் பிழைகளை திருத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைப் போன்ற காரணங்களை முன்வைத்தே குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தவிசாளர் எஸ்.பீ. மெத்தவத்த தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவதானம் செலுத்தாவிட்டால், தமது தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago