2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரன் பிரியங்கர

சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில், மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பல பிரதேசத்தில், இன்று (28)  அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் ஸ்தலத்திலேயே, உயிரிழந்துள்ளார்.

வான் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய 64 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மாதம்பே-கல்கமுவ பகுதியைச் சேர்ந்த, மீன் வியாபாரி ஒருவரே,  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குக் காரணமான வான் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .