2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரட்சியால் வடக்கில் அதிக பாதிப்பு

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின், வட பகுதியில் நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஆகிய  மாவட்டங்களிலேயே அதிகளவான மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் ஒரு சில குடும்பங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில், 15 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 23,000 குடும்பங்கள் கடந்த இரு மாதங்களாக நிலவும் வரட்சியுடன் கூடிய வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2,326 குடும்பங்களைச் சேர்ந்த 6,978 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 குடும்பங்கள் வரட்சியால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடும் மழை, வெள்ளம், மண்சரிவு மற்றும் கடும் காற்று ஆகிய அனர்த்தங்களால் 60,944 குடும்பங்களைச் சேர்ந்த 214,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .