2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வர்த்தக நிலையத்தில் திருடிய 3 பெண்களை கைது செய்ய நடவடிக்கை

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

6.துஷித குமார சில்வா

பேருவளை- ஹெட்டிமுல்ல பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்திலுள்ள, விலைக் கூடிய சஸ்டோஜன் டின்கள் 10, நெஸ்கபே போத்தல்கள் இரண்டை ஆடைக்குள் மறைத்து திருடிச் சென்ற 3 பெண்கள் தொடர்பில், வர்த்தக உரிமையாளரால் பேருவளை பொலிஸாருக்கு முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (12) 12.15 மணியளவில் பொருட்களை வாங்கும் போர்வையில், குறித்து 2 பெண்கள் வருகைத் தந்த சிறிது நேரத்தில் மற்றுமொரு பெண்ணும் இங்கு வந்து இந்த திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை வர்த்தக நிலையத்தில் பொறுத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளதாக, வர்த்தக நிலைய உரிமையாளர் நேற்று (13) பொலிஸில் முறைபாடு செய்துள்ளார்.

40- 43 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் மூவரே இவ்வாறு பொருட்களைத் திருடியுள்ளனரெனவும், இவர்களால் திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி 30,000 ரூபாய் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .