2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெற்றிபெற்றவர்களின் பெயர்களை வழங்குமாறு அறிவுறுத்தல்

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் பெயர்களை உடனடியாக அனுப்பிவைக்குமாறு கட்சி செயலாளர்களுக்கு இன்று (15) அறிவிக்கப்படவுள்ளது.

காலி மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரண இதனை கூறியுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கு 29 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக கடந்த 11 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23 372 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களைக் கைப்பற்றியது.

ஐக்கிய தேசிய கட்சி 10113 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5273 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் கைப்பற்றின.

இதேவேளை, இந்தத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி 2435 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .